சற்றுமுன்...




ஜனதா தள மாநாடு தேவகவுடா கலந்து கொள்கிறார்

August 28th, 2008 | பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » | Ping: தமிழ்மணம், தேன்கூடு

ஜனதா தள மாநாடு தேவகவுடா கலந்து கொள்கிறார்

நெல்லையில் ஜனதா தள மாநாடு நடைபெறுகிறது. இதில் முன்னாள் பிரதமர் தேவகவுடா கலந்து கொள்கிறார்.

மத சார்பற்ற ஜனதா தள மாநில பொதுச் செயலாளர் ஜான் மோசஸ் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

மத சார்பற்ற ஜனதா தள மண்டல மாநாடு நெல்லையில் வருகிற 30 ம் தேதி நடைபெறுகிறது. இதில் கட்சியின் அகில இந்திய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா கலந்து கொள்கிறார். மற்றும் தமிழ்நாடு ஜனதா தள தலைவர் இஸ்மாயில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.

இந்த மாநாட்டில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க வுடன் இணைந்து தேர்தலை சந்திப்பது என்று முடிவெடுக்கப்படுகிறது. பணவீக்கம், காஷ்மீர் பிரச்சினை, தீவிரவாதிகள் அச்சுறுத்தல், விலைவாசி உயர்வு ஆகியவற்றால் மத்திய மாநில அரசுகள் வருகின்ற தேர்தலில் தோல்வியை தழுவும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநகர் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் லிங்கம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.


இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை நியமிக்க நேர்காணல்: தங்கபாலு

August 26th, 2008 | பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » | Ping: தமிழ்மணம், தேன்கூடு

இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை நியமிக்க நேர்காணல்: தங்கபாலு

சென்னை, ஆக.26: இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க ஆகஸ்ட் 28, 29 தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு தெரிவித்துள்ளார்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

மதவாத சக்திகளின் தடைகளை உடைத்து நாட்டைக் காக்க இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் இளைஞர் காங்கிரஸ் அமைப்புகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ய நேர்காணல் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸ் அமைப்புகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க ஆகஸ்ட் 28, 29 தேதிகளில் மதியம் 2 மணிக்கு நேர்காணல் நடைபெறும்.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் ஜிதேந்திர சிங், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வர் ஆகியோர் இந்த நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.

தேசிய உணர்வு கொண்ட 18 முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் இந்த நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று தங்கபாலு அறிவித்துள்ளார்.


தமிழ்நாடு குடிகாரர்கள் நாடாக மாறி வருகிறது: ராமதாஸ்

August 26th, 2008 | பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » | Ping: தமிழ்மணம், தேன்கூடு

தமிழ்நாடு குடிகாரர்கள் நாடாக மாறி வருகிறது: ராமதாஸ்

சென்னை, ஆக. 26: தமிழ்நாடு குடிகாரர்கள் நாடாக மாறி வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இளம் விதவைகள் அதிகமாக உள்ளனர் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேதனை தெரிவித்தார்.

தமிழகத்தில் மதுவை ஒழிக்க மாற்று மதுவிலக்குக் கொள்கை அறிக்கையை சென்னையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டு ராமதாஸ் அளித்த பேட்டி:

மதுவை ஒழிக்க புதிய வழிமுறைகள் அடங்கிய “மாற்று மது ஒழிப்புக் கொள்கை’யை பாமக தயாரித்துள்ளது. கள்ளச் சாராயத்தை ஒழிக்க தனி உளவுப் பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு யோசனைகளை அதில் தெரிவித்துள்ளோம்.

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பாமக கடந்த 15 ஆண்டுகளாகப் போராடி வருகிறது. படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி மாவட்டம் தோறும் பாமக மகளிர் அணி சார்பில் மாநாடுகள் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதுவரை 8 மாநாடுகள் முடிந்துள்ளன.

மாநாடுகள் முடிந்ததும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடும் போராட்டத்தை மாநிலம் முழுவதும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNL20080826062128&Title=Latest+News+Page&lTitle=L%FBP%A3+%F9Nn%A7Ls&Topic=0&ndate=8/26/2008&dName=No+Title&Dist=


காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக?: தங்கபாலு சூசகம்

August 26th, 2008 | பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » | Ping: தமிழ்மணம், தேன்கூடு

காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக?: தங்கபாலு சூசகம்

சென்னை, ஆக. 25: காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக உள்ளிட்ட மதச் சார்பற்ற கட்சிகள் சேரும் வாய்ப்புகள் உள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ.தங்கபாலு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியது:

நாட்டில் அமைதியும், வளர்ச்சியும் நிலைக்க மதச்சார்பற்ற சக்திகள் ஒருங்கிணைந்து செயல்படுவது காலத்தின் கட்டாயம். தமிழகத்துக்கும் இது பொருந்தும்.

தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி மீண்டும் வலுப்பெறும். பாமக உள்ளிட்ட கட்சிகளிடையே தற்போதுள்ள கருத்துவேறுபாடுகள் விரைவில் நீங்கிவிடும். தேர்தல் நேரத்தில் தேமுதிக உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளும் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் இணைய வாய்ப்புகள் உள்ளன.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையும், காமராஜரின் திட்டங்களையும் திமுக அரசு செயல்படுத்தி வருகிறது.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080825135953&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&ndate=8/26/2008&dName=No+Title&Dist=0


திமுக கூட்டணியில் மீண்டும் பாமக?

August 24th, 2008 | பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » | Ping: தமிழ்மணம், தேன்கூடு

திமுக கூட்டணியில் மீண்டும் பாமக?

சென்னை, ஆக.24} திமுக தலைமையிலான கூட்டணிக்கு மீண்டும் பாமக வந்தால் கூட்டணி பலம்பெறும் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, திமுக}பாமக இடையே உள்ள பிரச்சினைகளை களையும் பொருட்டு முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று காலை சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”இரு கட்சிகளுமே மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. எனவே, மாநிலத்தில் அவர்கள் மீண்டும் இணைவதில் ஆச்சரியமில்லை” என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறுகையில், ”பாமகவுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் முதல்வர் கருத்து தெரிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பாமக நிறுவனர் ராமதாசுடன் பேச்சு நடத்துவதற்கான முயற்சிகளை நாங்கள் தொடங்குவோம்” என்றார்.

முதல்வர் கருணாநிதி மற்றும் சில மூத்த திமுக தலைவர்களை பாமக பிரமுகர் காடுவெட்டி குரு கடுமையாக விமர்சித்ததாக எழுந்த சர்ச்சையில், திமுக கூட்டணியிலிருந்து பாமக நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 


சிட்டுக்குருவி எண்ணிக்கையை கணக்கு எடுத்தல் அவசியம்: நிபுணர்கள் வலியுறுத்தல்

August 23rd, 2008 | பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, *பொது, அறிவிப்பு, சுற்றுச்சூழல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » | Ping: தமிழ்மணம், தேன்கூடு

சிட்டுக்குருவி எண்ணிக்கையை கணக்கு எடுத்தல் அவசியம்: நிபுணர்கள் வலியுறுத்தல்

 மும்பை, ஆக.22: சிட்டுக்குருவி நடமாட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எனவே, அதன் எண்ணிக்கையை கணக்கு எடுப்பது அவசியம் என்று, பறவைகள் ஆய்வு நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சிட்டுக்குருவி எண்ணிக்கை குறித்து கணக்கு எடுப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்துக்கு தாங்கள் பரிந்துரை செய்துள்ளதாக, பாம்பே தேசிய வரலாற்று சமூகத்தின் விஞ்ஞானி கிரிஷ் ஜெதர் தெரிவித்தார். பறவைகளின் நலம் குறித்து வன உயிரி ஆர்வலர்கள் பெரிய அளவில் கவலைப்படுவதில்லை. பறவைகளின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுக்காததே சிட்டுக்குருவி போன்ற பறவை இனத்தை நாம் இழக்க முக்கியக் காரணமாக அமைந்துள்ளது என்று குற்றம்சாட்டினார் நேச்சர் இந்தியா என்ற அமைப்பின் நிறுவனர் முகமது.

மாறிவரும் சுற்றுச்சூழலால் பறவைகள் இனம் நாளுக்கு நாள் அழிந்து வருகிறது. சில பறவை இனம் முற்றிலும் அழிந்து போகும் நிலையில் உள்ளது. செல்போன் தொலை தொடர்புக்கு உதவும் மின் காந்த அலைகளாலும் பறவைகள் அழிந்து வருவதாக அண்மையில் ஆய்வு உறுதிபடுத்தியது.
 
 


தென்னாப்பிரிக்க அரசின் கணக்கைத் தணிக்கை செய்யத் தயாராகும் இந்திய தணிக்கையாளர்கள்

August 23rd, 2008 | பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, தகவல், தேர்வு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » | Ping: தமிழ்மணம், தேன்கூடு

தென்னாப்பிரிக்க அரசின் கணக்கைத் தணிக்கை செய்யத் தயாராகும் இந்திய தணிக்கையாளர்கள்

தென்னாப்பிரிக்க அரசின் கணைக்கை தணிக்கை செய்ய நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய தணிக்கையாளர்கள் தயாராகியுள்ளனர். இவர்கள் மூன்று வருடம் தென்னாப்பிரிக்காவில் பணிபுரிவார்கள்.

மேலும் விரிவான செய்திக்கு

http://www.indiaenews.com/business/20080822/140728.htm


கலாம் பெயரில் போலி நிறுவனம்: 7 பேர் கைது

August 23rd, 2008 | பகுப்புகள்: *சற்றுமுன், சட்டம் - நீதி | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » | Ping: தமிழ்மணம், தேன்கூடு

கலாம் பெயரில் போலி நிறுவனம்: 7 பேர் கைது

பாட்னா, ஆக. 22: பிகார் மாநிலத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயரில் போலி நிறுவனம் ஒன்றை நடத்தி, இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்று செயலில் ஈடுபட்டிருந்த 7 பேரை போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

பிகாரின் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் பாகா என்ற இடத்தில் “டாக்டர் கலாம் கல்வி நிறுவனம்’ என்ற பெயரில் ஒரு நிறுவனம் இயங்குவதாகவும், அந்த நிறுவனம் இளைஞர்களுக்கு வேலை மற்றும் கல்வி உதவித் தொகை பெற்றுத் தருவதாகக் கூறி தலா ரூ. 20 ஆயிரம் வரை வசூலித்து ஏராளமானோரை ஏமாற்றி வருவதாகவும் பொதுமக்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் அந்த நிறுவனத்துக்கு சென்று போலீஸôர் விசாரணை நடத்தியதில் அது போலி நிறுவனம் என்பது அம்பலமானது. இதையடுத்து அந்த நிறுவன நிர்வாகிகள் 7 பேரை கைது செய்தனர். நிறுவனத்தில் இருந்து பதிவேடுகள், 3 செல்போன்கள், ஏராளமான அடையாள அட்டைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனிடையே, இந்த நிறுவனத்தை போன்று ஏராளமான போலி நிறுவனங்கள் வேலையில்லாத இளைஞர்களை குறிவைத்து பிகாரில் செயல்படுவதாக அந்த மாநில பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


புத்தகத்துக்கு வேலையில்லை: வீணாகும் பல கோடி

August 22nd, 2008 | பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், தகவல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » | Ping: தமிழ்மணம், தேன்கூடு

புத்தகத்துக்கு வேலையில்லை: வீணாகும் பல கோடி

சென்னை, ஆக. 21: தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் தற்போது புத்தகங்கள் மூலம் பாடம் நடத்தப்படுவதில்லை. இதனால் மாணவர்களுக்காக அச்சிடப்படும் கோடிக்கணக்கான மதிப்பிலான புத்தகங்களுக்கு பயனில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

எதிர்கால சமுதாயத்தின் ஆணிவேராக அமைவது இன்றைய குழந்தைகளின் தொடக்கக் கல்வியே. இதில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்னையும் எதிர்காலத்தில் சமுதாய பிரச்னையாக உருவெடுக்கும். தமிழகத்தில் தற்போதும் மிகப் பழமையான மெக்காலே கல்வித் திட்டத்தின்படியே கல்வி முறை இயங்கி வருகிறது.

இந் நிலையில் தமிழக அரசு கடந்த 2007-2008 கல்வி ஆண்டில் “செயல்வழிக் கற்றல்’ (ஏ.பி.எல்.) என்ற புதிய கற்பித்தல் முறையை ஆரம்பப் பள்ளிகளில் (ஒன்று முதல் 4-ம் வகுப்பு வரை) அறிமுகப்படுத்தியது.

மேலும் விரிவான செய்திக்கு

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080821121210&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&ndate=8/22/2008&dName=No+Title&Dist=


பெரிய கூட்டணி ஊழலுக்கு வழி வகுக்கும்’- விஜயகாந்த்

August 19th, 2008 | பகுப்புகள்: *சற்றுமுன், தமிழக அரசியல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » | Ping: தமிழ்மணம், தேன்கூடு

பெரிய கூட்டணி ஊழலுக்கு வழி வகுக்கும்’- விஜயகாந்த்

சென்னை, ஆக. 18: கூட்டணி பெரிதானால் அது ஊழலுக்குத்தான் வழி வகுக்கும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

சென்னையில் நிருபர்களிடம் திங்கள் கிழமை அவர் அளித்த பேட்டி:

நடிகர் சிரஞ்சீவி கட்சி தொடங்கியதைப் பற்றி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா “தமிழகத்தைப் பிடித்திருந்த வியாதி ஆந்திரத்துக்கும் பரவிவிட்டது’ என்று கூறியதைப் பற்றி..?

நாங்கள் வியாதிக்காரர்கள் என்றால் ஜெயலலிதா பெருவியாதிக்காரரா?

மேலும் விரிவான செய்திக்கு

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080818140044&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&ndate=8/19/2008&dName=No+Title&Dist=


ஓய்வு காலத்தை கழிக்க இந்தியாவுக்கு வருமாறு முஷாரபுக்கு சீக்கியர் அழைப்பு

August 19th, 2008 | பகுப்புகள்: *சற்றுமுன், அறிவிப்பு, தகவல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » | Ping: தமிழ்மணம், தேன்கூடு

ஓய்வு காலத்தை கழிக்க இந்தியாவுக்கு வருமாறு முஷாரபுக்கு சீக்கியர் அழைப்பு

புதுதில்லி, ஆக.19: ஓய்வு காலத்தை கழிக்க வருமாறு முஷாரபுக்கு இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பலதேவ் சிங். முஷாரப் தனது ஓய்வுக்காலத்தை கழிக்க இந்தியாவுக்கு வர வேண்டும் என பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.

முஷாரபுக்கு 350 ஏக்கர் நிலம், நல்ல குதிரைகள், சொகுசுக் கார், ஆடம்பரமான மாளிகை ஆகியவற்றைத் தரவும் அவர் முன்வந்திருக்கிறார்.

முஷாரபும் இந்தியாவில் பிறந்தவர் என்பதால் தாம் இதைத் தர முன்வந்திருப்பதாகக் கூறும் பலதேவ் சிங், பாகிஸ்தானில் முஷாரபுக்கு மதிப்புக் குறைந்திருந்தாலும், இந்தியர்கள் அவர் மீது அன்பு வைத்திருக்கிறார்கள் என்றார்.


தலித்-முஸ்லிம் ஒற்றுமையை யாராலும் பிரிக்க முடியாது: திருமாவளவன்

August 19th, 2008 | பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » | Ping: தமிழ்மணம், தேன்கூடு

தலித்-முஸ்லிம் ஒற்றுமையை யாராலும் பிரிக்க முடியாது: திருமாவளவன்

சென்னை, ஆக. 19: “தலித்கள் - முஸ்லிம்கள் இடையே பிரச்னையை ஏற்படுத்த சில அமைப்புகள் முயற்சிக்கின்றன. ஆனால் தலித் - முஸ்லிம் ஒற்றுமையை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது’ என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.

இது குறித்து சென்னையில் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கட்சி விழாவில் பங்கேற்பதற்காக கடந்த 17-ம் தேதி சென்னை வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களுக்கும், கல்பாக்கம் அருகில் உள்ள புதுப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த விரும்பத் தகாத, வேதனை அளிக்கும் நிகழ்வுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இது குறித்து கள ஆய்வு மேற்கொண்டு தவறு செய்த கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் இதுவரை விடுதலைச் சிறுத்தைகளுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே பிரச்னை நடைபெறவில்லை. தலித் மக்கள் பாதிக்கப்படும்போதெல்லாம் அவர்களுக்கு பக்கபலமாக முஸ்லிம்கள் இருந்துவருகின்றனர்.

தமிழகத்தில் எங்களது ஒற்றுமையை விரும்பாத சில அமைப்புகள் இப் பிரச்னையை ஊதிப் பெரிதாக்கி உள்ளனர். ஆனால் நாங்கள் ஒற்றுமையாக இருக்க உறுதி ஏற்கிறோம்.

புதுப்பட்டினத்தில் பிரச்னை நடைபெற்ற இடத்தில் போதுமான போலீஸ் பாதுகாப்பு இல்லை. போலீஸôரின் அஜாக்கிரதை, முன் எச்சரிக்கை நடவடிக்கை இல்லாதது, போலீஸôரின் தவறான அணுகுமுறை ஆகியவையே இப் பிரச்னை பெரிய அளவில் ஏற்பட காரணமாக இருந்தன என்றார் திருமாவளவன்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் ஹைதர் அலி, தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் தலைவர் உமர் பரூக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.